ஷா ஆலம், செப்டம்பர் 1:
லான்ஸ் கோப்ரல் வாலாந்தீனோ மேசா (29 வயது) கொலை தொடர்பில் இன்று காலை 34 வயது ஆடவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது வேலையின் போது பிங்கிரான் யுஎஸ்ஜே காவல்துறை நிலையத்தில் கொலை செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ மஸ்லான் மன்சூர் உறுதி படுத்திய வேளையில், சரவாக், சீபுவை சேர்ந்த சந்தேக நபர் வாக்குமூலம் கொடுத்த போது கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.
இதனிடையே, பொது மக்கள் எந்த ஒரு விபரீதமான செய்திகளை பரப்பக் கூடாது என்றும் இது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று நினைவுபடுத்தினார்.
#கேஜிஎஸ்