SELANGOR

ஈஜோக்கில் வெள்ளத்தினால் 25 பாதிக்கப்பட்ட மக்கள் இட மாற்றம்

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 3:

நேற்று ஈஜோக், ஸ்ரீ செந்தோசா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பத்து குடும்பங்களை சேர்ந்த 25 கிராமத்தினர் துயர்துடைப்பு மையத்திற்கு இடம் மாற்றப் பட்டனர். அவர்களின் வீடுகளில் 1.2 மீட்டர் அளவில் நீர் மட்டம் இருப்பதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நடவடிக்கை குழுவின் தலைவர் ஹாலிமாடியா புக்ரி கூறினார். அதிகாலை 4 மணியில் இருந்து பெய்த கனத்த மழையினால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நண்பகல் 12 மணி தொடங்கி பாதிக்கப்பட்ட மக்களை இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்றார்.

bt_11.2

 

 

 

 

 

”  பொது மக்கள் படகின் மூலம் கொண்டு சென்று தற்காலிக நிவாரண மையமான துவான் மீ தோட்டத்தின் சூராவில் தங்க வைத்துள்ளோம். தொடர்ந்து பெய்த மழையினால் நீர் மட்டம் உயர்ந்தது,” என்று கூறினார்.

தகவல்&படங்கள்: கோஸ்மோ ஓன்லைன்

#கேஜிஎஸ்


Pengarang :