PBTSELANGOR

எம்பிஎஸ், நகராண்மை கழக உறுப்பினர்களை தங்கள் பகுதிகளின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழு தலைவராக நியமனம்

ஷா ஆலம், செப்டம்பர் 4:

செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) எல்லா நகராண்மை கழக உறுப்பினர்களையும் தங்கள் சேவை புரியும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழு தலைவராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனங்கள் மாநில அரசாங்கம், சிலாங்கூரில் டெங்குவை ஒழிக்க தீவிர முயற்சியை காட்டுகிறது என்று செலாயாங் நகராண்மை கழகத்தின் தலைவர் சுலைமான் அப்துல் ரஹ்மான் கூறினார்.

”   டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குழுவின் மாநில அளவிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நகராண்மை கழக உறுப்பினர்களும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வர வேண்டும். பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல் படும் வேளையில் மாநில அரசாங்கத்தின் முயற்சி வெற்றி பெறும்,” என்று தெரிவித்தார்.

இதனிடையே, சுலைமான் மேலும் கூறுகையில், செலாயாங் நகராண்மை கழகம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சிறந்த அடைவுநிலையை எட்டும் நகராண்மை கழக உறுப்பினர்களுக்கும்  மற்றும் பணியாளர்களுக்கும்  சன்மானம் வழங்கப்படும் என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :