NATIONAL

கெஅடிலான் எந்த நிலையிலும் தயாராக உள்ளது,14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம்

இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் நாடாளுமன்றத்தை கலைத்து 14-வது பொதுத் தேர்தலை நடத்துவார் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். கெஅடிலான் கட்சி 14-வது பொதுத் தேர்தல் களத்தில் இறங்கி அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கு எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்கும் என்றார்.

”    அம்னோ தேசிய முன்னணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றாலும் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

keadilan

 

 

 

 

 

மேலும் விவரிக்கையில், தியான் சுவா கெஅடிலான், தங்களின் தேர்தல் இயந்திரங்கள் தயாரான நிலையில் இருப்பதாக கூறினார். எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும், ஏனெனில் நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்யும் தேர்தலாக அமையும் என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :