SELANGOR

“ஆயர் சிலாங்கூர்” நிறுவனம் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை மறுத்தது

ஷா ஆலம், 25 ஏப்ரல்:

சிலாங்கூர் குடிநீர் நிர்வாக நிறுவனம்  ( ஆயர் சிலாங்கூர்) இணைய தளத்தில் வெளியான கிள்ளான், ஷா ஆலம் மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளில் குடிநீர் தடங்கல் 30 ஏப்ரல் அன்று ஏற்படும் என்ற  தகவல் பொய்யானது என  ஊர்ஜிதம் செய்தது.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொழில் தொடர்பு  இலாகாவின் தலைவர்  அமின் லின் அப்துல்லா கூறுகையில் அந்த தகவல் கடந்த  ஆண்டு  எதிர் நோக்கிய குடிநீர் கட்டுப்பாடு அட்டவணையை மேற்கோள்காட்டி தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது.

” பொது மக்கள் விவேக தொலைபேசியில் “மைஷாபாஸ்” அல்லது  இணைய தளத்தில் www.syabas.com.my பயன் படுத்தி முழுமையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு சரியான குடிநீர் விநியோகம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ” என்று உறுதியாக கூறினார்.

 


Pengarang :