ஷா ஆலம், 27 ஏப்ரல்:
சிலாங்கூர் மாநில அரசாங்கக் கட்டிடத்தில் “மகளிரை மதிப்போம் திட்டத்தில்”(ஐடபல்யுஎச்) 12 கார் நிறுத்துமிட சேவையை கர்ப்பிணி பெண்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மாநில சுகாதாரம், மகளிர் மற்றும் குடும்ப நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி தெரிவிக்கையில், கட்டிடத்தின் 3-வது நுழைவாயிலில் , பகுதி ஏ-இல் 10 கார் நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், பிரத்தியேக நுழைவாயிலில், பகுதி ஈ-இல் 3 கார் நிறுத்துமிடமும் அமைத்துத் தரப்பட்டதாக கூறினார்.
” மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (யுபெண்) நடத்திய ஆய்வின்படி, முதலாளிகள் கர்ப்பிணி பெண்களுக்கு கார் நிறுத்துமிட சேவை செய்து தர வேண்டும் என அறியப்படுகிறது. இதன் தாக்கத்தினால், இன்று மாநில அரசாங்கம் 1 மே, தொழிலாளர் தினம் முதற்கொண்டு இச்சேவையை தொடங்கும்.” என்றார்