ஷா ஆலம், 20 ஏப்ரல்:
ஊழல் மோசடி வழக்குகளை எதிர் நோக்கிய ஜோகூர் மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் லத்தீப் பாண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த அறிவிப்பை தனது வழக்கறிஞர் மூலம் தகவல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார்.
அவ்வறிக்கையில், அவர் தொடர்ந்து மாநில அரசர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டர் மற்றும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டினுக்கும் நன்றி தெரிவிப்பதோடு மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தமக்கு வாய்ப்பளித்ததிற்கும் நன்றி கூறினார்.
மேலும் கூறுகையில் ரிம2 மில்லியன் சேகரித்து ஜாமீன் தொகையை செலுத்தி விட்டதாகவும் தாம் காவலில் இருந்து வெளியாகி விட்டதாகவும் தெரிவித்தார்.