செபராங் பிறை, 24 ஏப்ரல்:
துன் மகாதீர் முகமட் 1990-இல் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை மோசடியில் எந்த ஒரு விசாரணையையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரான மகாதீர் முகமட், இந்த விசாரணையை எந்நேரமும் எந்த இடத்திலும் அதிகாரிகளை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்
” இது வரையில் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் நான் இதற்கு தயாராக இருக்கிறேன். மாறாக, அவர்கள் தேதியையும் இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.” எனவும் வலியுறுத்தினார்.