SELANGOR

மந்திரி பெசார்: என்னுடைய சேவை மக்களுக்காக, ஆனால் நோ ஒமார் அம்னோவுக்காக மட்டுமே

பெட்டாலிங் ஜெயா, 23 ஏப்ரல்:

தினந்தோறும்  அம்னோ தேசிய முன்னணியின் ஊடகங்களின் தாக்குதல்  இருந்தாலும் எல்லா நிலைகளிலும்  உள்ள   மக்களுக்கு  அரசியல் சித்தாந்தகளை தாண்டிச்   சிறந்த முறையில் சேவையாற்றும் சிந்தனைகள் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், இதற்கு மாறாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் கொஞ்சம் கூட தொழில்முறையை பின்பற்றாமல் வெளிப்படையாக அம்னோ வெற்றி பெறாத தொகுதிகளைப் புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.

 

” கோபிந் சிங் சொன்னது போல் தினந்தோறும் நம்மை  மட்டம் தீட்டுகிறார்கள். இரவு 8 மணி ஆனாலே ஜமால்  அல்லது நோ ஒமார் நம்மை தீவிரமாக தாக்குதல் நடத்துகிறார்கள். ”

“நேற்றைய  ஊடகச் செய்தியில் நோ ஒமார் அம்னோ இல்லாத  ஊராட்சி மன்ற பகுதியில் நிதி  ஒதுக்கீடு இல்லை. அப்படி  என்றால் சம்பந்தப்பட்ட  ஊராட்சி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்  அம்னோ பிஎன்னை  சார்ந்தவர்  இல்லையென்றால் மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடையாது.”

மேலும் விவரிக்கையில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் பேசுவதைக் குறைத்து எல்லா நிலைகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் கவனத்தை செலுத்துகிறது என்றார்.

 

@கெஜிஎஸ்


Pengarang :