MEDIA STATEMENT

மலேசிய இந்தியர் பெருந்திட்டம், தேர்தலில் இந்திய வாக்குகளை கவர கபட நாடகம்

இந்தியர்கள் மலேசிய நாட்டின் குடிமக்கள், இந்நாட்டின் மேம்பாட்டுக்காக பால்மரத் தோட்டத்திலும் செம்பனை தோட்டத்திலும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது சரித்திரம். மேலும் சுதந்திரத்திற்கு முன்பே சியாம்-பர்மா இரயில் தண்டவாளத்தை அமைக்க ஜப்பானிய  ராணுவம்  இந்தியர்களையே பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்திய சமுதாயம் தேசிய நீரோட்டத்தில் இருந்து  ஒதுக்கப்பட்டு பல்வேறு துறைகளில் பின்தங்கிய நிலையில்  இருக்கிறார்கள். அம்னோ பிஎன் அரசாங்கம்  இந்தியர்களை மாற்றான் தாய் போன்று நடத்தி வாய்ப்புகளை வழங்குவதில் ஏமாற்றி வருகின்றனர்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாட்டின் பிரதமர் நஜிப் நிர்வாகத்தில் கீழ் அம்னோ தேசிய முன்னணி  அறிவித்துள்ள மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இத்திட்டம் 10 ஆண்டு கால கட்டத்தில் அமல்படுத்த இருக்கிறது. மேலும் இது  எந்த ஒரு செயல் நடவடிக்கைகள் இன்றி வெறும்  அறிக்கை வடிவிலே இருப்பதாக தெரிகிறது.  இத்திட்டம் 1.9 மில்லியன்  மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்  என்று நம்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதற்கு முன்பு பல  அறிவிப்புகள் நஜிப் நிர்வாகத்தில் செய்திருப்பதால்  இது வெறும் கண்துடைப்பு நாடகமே.  இத்திட்டம்  இந்தியர்களின் உரிமைகளை பெற்றுத்தராது என்று  அறிவித்து உள்ளது.

இங்கு, அம்னோ தேசிய முன்னணி  இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்திருக்கிறது? பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் கொடுத்து வாக்கு வங்கியாகவே இந்தியர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்திய சமுதாயம் நம்மை நாமே ஒன்று கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி? நஜிப் நிர்வாகத்தில் கீழ்  உண்மையாக நமக்கு  உதவி கரம் நீட்டுகிறாரா? இது வரை பிரதமராக இருந்து மலாய்காரருக்கு மட்டும்  என்ன செய்து கொண்டிருக்கிறார்?

 

umnobn-e1464227547794

 

 

 

 

 

நாடு அம்னோ தேசிய முன்னணி  நிர்வாகத்தில் மிக மோசமான நிலையில் இருப்பதாக ஒத்துக் கொள்ள வேண்டும் நஜிப்.  இந்த நிலை மாற வேண்டும்  என்றால் இந்தியர் மட்டுமில்லாமல் அனைத்து மலேசியர்களும் நடப்பு அரசாங்கத்தை மாற்ற வேண்டும்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி  இவ்வேளையில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை புதிய பரிமாணத்தை கொண்டு வருவோம் என  உறுதியாக உங்களுக்குச் சொல்கிறோம்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாட்டின்  அதிகரிக்கும்  ஊழல் மற்றும் நிர்வாக கோளாறுகளை ஒழிக்கும்.  இது  இந்திய சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து மலேசியருக்கும் நன்மை பயக்கும் என்று  ஆணித்தரமாக சொல்ல விரும்புகிறோம்.

Pakatan Harapan juga akan menghapuskan ketirisan dan rasuah. Kami percaya strategi ini akan memberi manfaat bukan sahaja kepada kaum India, tetapi kepada semua kaum di Malaysia.

 

பாக்காத்தான் ஹாராப்பான்

 


Pengarang :