NATIONALRENCANA PILIHAN

அஸ்மின் : நாடு கிரீஸ் போல திவாலாகி விடுவதை தடுக்க அம்னோ தேசிய முன்னணியை மாற்றுவோம்

கோம்பாக், மே 23:

கிரீஸ் நாட்டைப் போன்று திவாலாகி விடுவதில் இருந்து தடுக்க எதிர் வரும் பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தை மக்கள் அதிரடியாக வீழ்த்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். 14-வது பொதுத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் அம்னோ தேசிய முன்னணி ஆட்சி அமைத்தால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடையும் என்ற விவரித்தார்.

”   நாட்டின் முதலீடுகள் குறையும் போது நமது பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். நாட்டின் வேலையின்மை அதிகரித்து வருகிறது. நமது பிள்ளைகள் பட்டப்படிப்பு பெற்றிருந்தாலும் வேலை வாய்ப்பு இல்லை. எவ்வளவு நாட்கள் நாம் அமைதியாக இருப்பது? நாடு திவாலாகி விட்ட பிறகு தான் மாற்றம் செய்யப் போகிறீர்களா? மாற்றம் செய்ய சரியான தருணம் மிக அருகில் இருக்கிறது,” என்று ஸ்ரீ சியந்தான் மண்டபத்தில் நடைபெற்ற மலேசியாவை காப்பாற்றுவோம் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Azmin ceramah

 

 

 

 

 

 

நாடு திவாலாகி விட்ட பிறகு மீண்டும் பழைய பொருளாதார நிலைக்கு கொண்டு வர மிக நீண்ட காலம் பிடிக்கும் என்றார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியா நாட்டு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால் தங்களை மலேசியாவில் முதலீடு செய்வதற்கு தயங்குகிறார்கள் என்று விவரித்தார்.

பாக்காத்தான் புத்ரா ஜெயாவை கைப்பற்ற மக்கள் வழி வகுக்கும் போது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியும் என்று கூறினார்.


Pengarang :