SUKANKINI

எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கிலே தொடர்ந்து நடக்கும்

ஷா ஆலம், மே 13:

மலேசிய கால்பந்து சங்கம் (எப்ஃஏஎம்) தங்களின் முடிவில் இருந்து மாறாது. எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டம் எதிர் வரும் மே 20-இல் ஷா ஆலம் அரங்கில் நடக்கும் எனவும் புக்கிட் ஜாலில் அரங்கில் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மலேசிய அரங்க வாரியம் இறுதி ஆட்டத்தை புக்கிட் ஜாலில் அரங்கில் நடத்தலாம் என ஆலோசனை வழங்கியது. ஆனால், கார் நிறுத்துமிட சேவை பற்றாக்குறை காரணமாக ஷா ஆலம் அரங்கிலே நடத்த முடிவு செய்யப்பட்டது எனவும் கால்பந்து ரசிகர்களின் வசதிக்கு ஏற்ப எப்ஃஏஎம் மற்றும் எப்ஃஎம்எல்எல்பி சேர்ந்து இந்த முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்ஃஏஎம்-இன் பொதுச் செயலாளர், டத்தோ ஹாமிடின் முகமட் அமின் எல்லா அம்சங்களையும் சீர்தூக்கி பார்த்து மிக சிறந்த முடிவு எடுத்ததாக கூறினார்.


Pengarang :