SELANGOR

எப்ஏ கிண்ண இறுதி ஆட்டம்: பாதுகாப்பு முறைகள் கடுமையாக்க படும்

ஷா ஆலம், மே 20:

எப்ஃஏ கிண்ண இறுதி ஆட்டத்தை காண ஷா ஆலம் அரங்கை நோக்கி வரும் கெடா மற்றும் பகாங் ஆதரவாளர்கள் நுழைவாயிலில் கடுமையான பாதுகாப்பு வளையத்தை கடந்து வர வேண்டும் என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஷாபியின் மாமாட் விவரித்தார். தனது தரப்பும் மலேசிய கால்பந்து சங்க நிறுவனமான எப்எம்எல்எல்பி உடன் சேர்ந்து மகளிர் மற்றும் சிறுவர், மேலும் எந்த கைப்பையை எடுத்து வராத ரசிகர்களுக்கு தனியாக மூன்று நுழைவாயில் திறந்திருப்பதாக தெரிவித்தார்.

”   எந்த ஒரு கூர்மையான ஆயுதங்களை எடுத்து வராமல் இருக்க அரங்கில் கடுமையான பரிசோதனைகளுக்கு ரசிகர்கள் ஈடுபடுத்தப்படுவர்,” என்று சீனார் ஹரியானில் செய்தி வெளியிட்டுள்ளது.

 

PIALA FA

 

 

 

 

 

 

போக்குவரத்து தொடர்ந்து சீராக இருக்க, கெடா ரசிகர்களின் பேருந்துகள் பெர்சியாரான் கெர்ஜாயாவிலும் பகாங் பேருந்துகள் எயிஒன் பேரங்காடிக்கு அருகாமையில் அமர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Pengarang :