NATIONALRENCANA PILIHAN

கெஅடிலான், மாற்று தகவல் ஊடகங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்கு தலை வணங்குகிறது

மக்கள் நீதி கட்சி மாற்று தகவல் ஊடகங்களின் தகவல் வழங்கும் மற்றும் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலையாய கடமையை பாராட்டுகிறது என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் கைப்பாவையாக செயல்படும் தகவல் ஊடகங்களின் ஒரு சார்பாக தகவல் வழங்கினாலும் மாற்று தகவல் ஊடகங்களின் உண்மையான தகவல்களை பகிர்ந்து மக்களை தெளிவடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

”   மறுமலர்ச்சி காலத்தில் இருந்து உங்களின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பு என்றுமே என்னால் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்துகிறது. தொழில் முறையிலும் தைரியமாகவும் செயல் படும் சமூக வலைதளத்தின் நிருபர்கள், மலேசிய நாட்டின் அரசியல் சூழ்நிலையை மாற்றி அமைத்துள்ளது,” என்று ராஜா மூடா மண்டபத்தில் நடைபெற்ற 12-வது கெஅடிலான் கட்சியின் தேசிய மாநாட்டில் தனது தலைமை உரையில் பேசினார்.

Wan Azizah 1

 

 

 

 

 

தகவல் ஊடகங்களை அடுத்து டாக்டர் வான் அஸிஸா, மறுமலர்ச்சி போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். கடந்த 13வது பொதுத் தேர்தலில் மலேசியா வாக்காளர்கள் மறுமலர்ச்சி சிந்தனை மற்றும் கெஅடிலான் தலைமைத்துவத்தை 52% ஆதரித்து உள்ளதை சுட்டிக் காட்டி பெருமிதம் கொண்டார்.


Pengarang :