PBTRENCANA PILIHANSELANGOR

பரிவு மிக்க முதலாளி விருதை எம்பிஎஸ் பெற்றது

ஷா ஆலம், மே 2:

செலாயாங் நகராண்மை கழகம் 2017 புத்ராஜெயா இஸ்லாமிய மையத்தில் நடைபெற்ற கியுபெக்ஸ் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் சிறந்த பரிவு மிக்க முதலாளி விருதை தட்டிச் சென்றது.

இந்த 2017-வின் விருது தேசிய அளவில் அரசாங்க இலாகா மற்றும்  ஊராட்சி மன்றங்களுக்கு இடையில் அறிவிக்கப்பட்ட விருதாகும்.

எம்பிஎஸ் தலைவர் சுலைமான் அப்துல் ரஹ்மான் கூறுகையில், தனது நிர்வாகத்தில்  எப்போதும் பணியாளர்களின் நலன் முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

” பல்வேறு முயற்சிகள் மற்றும் வசதிகள் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்டது  எனவும் இது தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,”என்று கூறினார்

”  நிர்வாகத்தின் பரிவு மிக்க செயல்பாடுகள் பணியாளர்களின் தரமான சேவையை அதிகரிக்கும்,” என்று கூறினார்.

சுலைமான் மேலும் விவரிக்கையில், தனது  எல்லா பணியாளர்களும் ஊராட்சி மன்ற தொழிற்சங்கத்தில் சேர்ந்து கொள்ள பணித்திருக்கிறேன் என்றும் இதன் மூலம் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப் படவேண்டும் என்று விவரித்தார்.

எம்பிஎஸ் தனது நிர்வாகத்தில் எப்போதும் பணியாளர்கள் சிறந்த சேவையை  அளிக்க தனி, குழு அல்லது  இலாகாவின்  அடிப்படையில் சிறப்பு வெகுமதிகளும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், இந்த விருது தேசிய அளவில் பெற்றது பெருமை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்த விருது நிகழ்ச்சியைப் ஏற்பாடு செய்த கியுபெக்ஸ்க்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இவ்விருது கவுன்சிலர்களும், நிர்வாகத்தினரும் மற்றும் பணியாளர்களும் தங்களின் சேவைத் தரத்தை மேம்படுத்த வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

=EZY=


Pengarang :