நேற்று முடிந்த கெஅடிலான் கட்சியின் 12-வது தேசிய மாநாடு மூன்று நாட்களுக்கு இளைஞர் மற்றும் மகளிர் மாநாடுகள் சேர்ந்து நடத்தியது அனைவரும் அறிந்ததே. முன்னணி தலைவர்களின் எழுச்சி மிகு உரைகள் 14-வது பொதுத் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் இறுதி கூட்டமாக அமைவதுடன் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்ற தோற்றத்தை தருகிறது.
மக்களுடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் தொடர்ந்து மாற்றம் எனும் தாரக மந்திரத்தை வாக்களிக்கும் தினம் வரை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதோடு அனைவரும் ஒருங்கிணைந்து தோழமை கட்சிகளுடன் ஒத்துழைத்து போர் களத்தில் இறங்க ஆயுத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கெஅடிலான் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலை 14-வது பொதுத் தேர்தலில் கொண்டு செல்வதில் உறுதியாக இருக்க வேண்டும். கெஅடிலான் வென்ற இடங்களில் பார்க்கும் பொழுது தொடர்ந்து பெரும் வெற்றிகளை பெற முடியும் என்றும் வாக்காளர்கள் ஆதரவை கண்டிப்பாக தருவார்கள் என்று தெரிகிறது.