ANTARABANGSA

கனடாஏர் தீயணைப்பு விமானம் விபத்துக்குள் ஆன செய்தி பொய்யானது

லிஸ்பன், ஜூன் 21:

போர்ச்சுகல் நாட்டின் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப் பட்ட விமானம் விபத்திற்குள்ளானது என்ற செய்தியை அந்த நாட்டு அதிகாரிகள் மறுத்தனர். இதற்கு முன்பு உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களான எஸ்ஐசி மற்றும் டிவிஐ கனடாஏர் விமானம் பெட்ரோகாவ் கிராண்டே அருகாமையில் விபத்துக்குள்ளாகி 64 உயிர்ப்பலி ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக செய்தி நிறுவனமான பிபிசி ஏறக்குறைய 1000 தீயணைப்பு படையினரை கொண்டும் சில விமர்சனங்களின் துணையோடு தீயை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இந்த தீயினால் 130 பொது மக்கள் காயமடைந்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டு அதிகாரிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டாலும் வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால் நிலைமை மோசமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

#கேஜிஎஸ்


Pengarang :