SUKANKINI

போர்ச்சுகல் & தென் கொரியா விளையாட்டாளர்கள் பிகேஎன்எஸ் அணியை பலப்படுத்துவர்

ஷா ஆலம், ஜூன் 8:

பிகேஎன்எஸ் எஃப்சி இரண்டு இறக்குமதி ஆட்டக்காரர்கள் கொண்டு வந்து அணியை பலப்படுத்தி சூப்பர் லீக் பட்டியல் தனது நிலையை மேம்படுத்தவும் தொடர்ந்து மலேசிய கிண்ணத்தில் சிறந்த வெற்றி பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளும் என்று பிகேஎன்எஸ் அணியின் செயலாளர் முகமட் அடி ஹார்மீஸி ஹரிபீன் கூறினார். செல்சி அணியைச் சேர்ந்த போர்ச்சுகல் நாட்டின் ஃபாபியோ ஃபெரெரா மற்றும் தென் கொரியா விளையாட்டாளர் பார்க் கிவாங் ஆகிய இருவரே இறக்குமதி செய்யும் ஆட்டக்காரர்கள் ஆவார்.

பார்க் ஜப்பான் நாட்டின் இரண்டாம் லீக் போட்டி மற்றும் இந்திய சூப்பர் லீக் போட்டியிலும் விளையாடி உள்ளார். மேலும் அண்மையில் பிகேஎன்எஸ் அணிக்கு விளையாடி கோல் புகுத்தினார்.

இதனிடையே பிகேஎன்எஸ் எப்ஃசி மத்திய திடல் ஆட்டக்காரர் முகமட் கைருல் ஹஸ்ரின் அவர்களை மலாக்கா யுனைடெட்  அணியில் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமட் கைருலை விட்டுக் கொடுத்த மலாக்கா யுனைடெட் அணியின் துணைத் தலைவர் டத்தோ வீரா யூசோப் மஹாடிக்கு பிகேஎன்எஸ் நன்றி கூறியது.


Pengarang :