ஷா ஆலம், ஜூன் 23:
நேற்று லண்டனில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2018 உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் நான்கு இடங்களில் தேர்வு பெறும் அணிகள் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்தீபன் வான் ஹூசேன் தலைமையில் மலேசியா அணி எட்டாவது முறையாக தேர்வு பெறுவது சிறப்பு. இதற்கு முன்பு ஏழு முறை- 1973, 1975,1978,1982,1998, 2002 மற்றும் 2014 ஆகிய உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் தகுதி பெற்றது சரித்திரமாகும்.
சனிக்கிழமை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை சந்திக்க இருப்பதாக ஸ்தீபன் தெரிவித்தார். இதற்கு முன்பு அர்ஜென்டினா அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
தகவல்: பெர்னாமா
#கேஜிஎஸ்