பிளாஸ்டிக் ஆலை தீக்கிரை சம்பவத்தின் ஆகக் கடைசி தகவல்கள்
திகதி/கிழமை: ஜூன் 29, 2017 (வியாழக்கிழமை) – 5-வது நாள்
இடம்: ராசா, கோலா குபு பாரு
மாவட்டம்: உலு சிலாங்கூர்
மாநில நிவாரண நிர்வாகம் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
– தீ விபத்து நடந்த இடத்தில் இன்னும் 30% புகை வெளியாகி கொண்டிருக்கிறது
– தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
– பொதுப் பணித் துறை மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் போன்ற மாநில அரசாங்கத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– லுவாஸ் ஆற்றின் நீர் மாசு படாமல் இருக்க பரிசோதனை மேற்கொண்டு சிலாங்கூர் ஆறு தூய்மைக்கேடு ஏற்படவில்லை என்று உறுதிப் படுத்தியது.