ஷா ஆலம், ஜூலை 5:
சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) பயனீட்டாளர்களுக்கு சேவைத் தரத்தை மேம்படுத்த ‘நிறுவன வளத் திட்டமிடல்’ (இஆர்பி) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆயர் சிலாங்கூரின் தலைமை செயல் அதிகாரி சுஹாய்மி கமாரூஸாமான் கூறுகையில், இஆர்பி திட்டம் எல்லா செயல்களையும் ஒருங்கிணைத்து மற்றும் பணியாளர்கள் மற்றும் சொத்துடமைகளை அதிகப்படியாக பயன்படுத்த வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.
தற்போதைய தகவல் தொழில்நுட்பம் முறை ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இன்றி இயங்குவதாக கூறினார். மேலும் இவை எல்லா வளங்களையும் முறையாக நிர்வகிக்க முடியவில்லை என்று விவரித்தார்.
” அதிகப்படியாக வேலை செய்யும் முறை மற்றும் உலக தலைசிறந்த தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தும் தருணம் வந்து விட்டது,” என்று இஆர்பி அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
#கேஜிஎஸ்