PENDIDIKANSELANGOR

1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையதளத்தில் டியூசன் வகுப்பில் பதிந்தனர்

ஷா ஆலம், ஜூலை 26:

இணையதள டியூசன் வகுப்புத் திட்டத்தில் (டியூசன் ஓன்லைன்) 1054 மாணவர்கள் பதிந்து உள்ளனர். கடந்த ஏப்ரல் 5-இல் ஆரம்பிக்கப் பட்ட இந்த இணையதள டியூசன் வகுப்பில் எஸ்பிஎம் தேர்வில் அமரவிருக்கும் மாணவர்கள் மட்டுமே இணைந்து கொள்ள முடியும் என்று சிலாங்கூர் மாநில கல்வி, அறிவியல், தொழில் நுட்ப மற்றும் புத்தாக்க ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள 56 சட்ட மன்றங்களிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என கூறினார். இது வரை இத்திட்டத்தை பற்றி எந்த ஒரு ஆய்வு நடவடிக்கைகளும் செய்யப்படவில்லை. டியூசன் ஓன்லைன் சில காலங்களுக்கு பிறகு மறுஆய்வு செய்யப்படும் என்று 13வது சிலாங்கூர் சட்ட கூட்டத் தொடரில் நிக் நஸ்மி நிக் அமாட் பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :