ஷா ஆலம், ஜூலை 15:
ஸ்ரீ மூடா சட்ட மன்றத்தை சேர்ந்த 116 ஏழைகளுக்கு மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) மூலமாக ரிம 34,800-ஐ பெருநாள் உதவி நிதியாக வழங்கப்பட்டது. மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இந்த உதவி நிதிகளை அலாம் மெகா, ஷா ஆலம் செக்சன் 27, எம்பிஎஸ் பொதுத் திடலில் நடைபெற்ற ஸ்ரீ மூடா சட்ட மன்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் எடுத்து வழங்கினார். அவரோடு எம்பிஐயின் தலைமை செயல் அதிகாரி சோபான் அப்ஃபெண்டி அமீனுடின் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருவரும் ரிம 300 உதவி நிதியாக வழங்கப்பட்டது என்று ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாஃபி கூறினார்.
இதனிடையே, நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் 5,000 பேர் கலந்து கொண்டனர். பல்லின மக்கள் திரளாக வந்து ஸ்ரீ மூடா சட்ட மன்ற திறந்த இல்ல நிகழ்வை சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா மற்றும் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#கேஜிஎஸ்