NATIONALRENCANA PILIHAN

அஸ்மின்:பாக்காத்தான் தொகுதி பங்கீடுகள், கூட்டணி கட்சிகளின் ஒருமித்த கருத்தை கொண்டு அமையும்

பத்து கேவ்ஸ், ஆகஸ்ட் 12:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடுகள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உச்ச மன்ற கூட்டத்தில் பேசப்பட்டு ஒருங்கிணைந்த கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தேர்தல் இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பல்வேறு கலந்துரையாடல் மூலம் அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து தொகுதி பங்கீட்டில் இணைந்து செயல் பட்டு அடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

”   இது ஒரு தொடர்ச்சியான முயற்சி ஆகும். எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்து அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெற்றியை தரும். வெற்றிக்கனியை பறிக்க தகுந்த அரசியல் வியூகம் அமைக்கப் பட வேண்டும். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் வேளையில், நோக்கத்தை அடைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்,” என்று தெரிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உச்ச மன்றம் அதன் உதவித் தலைவர் மற்றும் தேர்தல் இயக்குனர் பதவியில் தம்மை நியமனம் செய்ததன் அடிப்படையில் இப்படி கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :