SELANGOR

பொதுத் தேர்தலில் வென்றால் பரிவுமிக்க திட்டங்கள் புத்ரா ஜெயாவிலும் அமுல்படுத்தப்படும்

மத்திய அரசாங்கம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நலத் திட்டங்களின் அமலாக்கத்தை பின்பற்ற வேண்டும். மலேசியா நாட்டு மக்களின் செழிப்பான வாழ்க்கையை மேம்படுத்த புத்ரா ஜெயா நிர்வாகம் இத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இறுதியில் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதும் பரிவுமிக்க மக்கள் நல திட்டங்கள் புத்ரா ஜெயாவிற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

”   தற்போதைய புத்ரா ஜெயாவில்  உள்ள தலைவர்களை இது பொறுத்தது, ஆனால், இறைவன் அருளால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று திறன் மிக்க பொருளாதார கொள்கைகளை பின்பற்றும். இத்திட்டங்கள் பரிவுமிக்க மக்கள் நலன் சார்ந்தும், நேர்மையான மற்றும் வெளிப்படையாக செயல்பாடுகள் கொண்டு நடத்தப்படும்,” என்று கூறினார்.

IMG_20170811_144924

 

 

 

 

 

மேலும் விவரிக்கையில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கொள்கையான மாநிலத்தின் வளம் மக்களுக்கு திருப்பிக் கொடுத்து வரும் நடைமுறை தேர்தலில் வெற்றி பெற்றால் புத்ரா ஜெயாவில் செயல்படுத்தப் படும் என்றார்.

அஸ்மின் அலி, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நிலையில் மீண்டும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். மத்திய அரசாங்கம் பொறுப்புள்ள, நேர்மையான மற்றும் வெளிப்படையாக நிர்வாகத்தை கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக முதலீட்டாளர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என்று உறுதியாக கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :