SUKANKINI

மெர்டேக்கா கிண்ணத்தின் மேன்மைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 23:

முன்னாள் தேசிய கால்பந்து ஜாம்பவான் டத்தோ சந்தோக் சிங், மலேசிய கால்பந்து சங்கத்தை 2013-இல் நிறுத்தப்பட்ட  மெர்டேக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை மீண்டும் கொண்டு வர வேண்டும் கேட்டுக் கொண்டார்.

வருடாந்திர போட்டியான மெர்டேக்கா கிண்ணம் பல்வேறு வட்டார நாடுகள் கலந்து கொள்ளும் என்றும் விளையாட்டாளர்கள் தங்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடி வந்தது இன்னும் தனது நினைவில் உள்ளது என்று கூறினார்.

”   மெர்டேக்கா கிண்ணத்தை ஏன் ஏற்பாடு செய்ய மாட்டார்கள் என்று தெரியவில்லை.  மலேசிய கால்பந்து சங்கம் நாட்டின் முன்னணி விளையாட்டாளர்களை களம் இறக்காமல் போனதால், அழைக்கப்படும் நாடுகளும் இரண்டாம் தர ஆட்டக்காரர்களை இறக்கியது. இந்த விளையாட்டு போட்டி நடக்கும் போது மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய கால்பந்து அணிக்கு ஆதரவு அளித்தது கண்கூடான காட்சியாகும்,” பிஃரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Pesta Bola Merdeka

 


Pengarang :