SELANGORSUKANKINI

ஷா ஆலம் அரங்கில் சீ விளையாட்டு கால்பந்து இறுதி ஆட்டம் நடைபெறும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 27:

எதிர் வரும் ஆகஸ்ட் 29, செவ்வாய்கிழமை சீ விளையாட்டு கால்பந்து இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கில் நடைபெறவிருக்கிறது என்று மலேசியா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளிடையே ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் மலேசியா கால்பந்து சங்கம், இன்று காலை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹாகீம் அலி உடன் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, வெண்கலம் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மியான்மர் மற்றும் இந்தோனேசியா செலாயாங் அரங்கில் மாலை 4.30 நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :