SELANGOR

1எம்டிபி ஊழலினால், புத்ரா ஜெயாவை கூட இழந்து விடலாம்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 14:

தேசிய முன்னணி சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சிக்கு முன் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் ஊழல் சம்பந்தப்பட்ட விளக்கத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். அப்படி தேசிய முன்னணி செய்யத் தவறினால், சிலாங்கூரை கைப்பற்றும் கனவு பலிக்காது மட்டுமல்ல புத்ரா ஜெயாவை தற்காப்பதிலும் தோல்வி அடையும் என்றார்.

”    கூ நான் (டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்) 1எம்டிபி நெருக்கடியை ஒத்துக் கொண்டுள்ளார். இது அம்னோ தேசிய முன்னணி மக்களிடையே நம்பிக்கையை பெறுவதில் தள்ளாடி வருகிறது என்றால் மிகையாகாது. மக்களின் நம்பிக்கையை இந்த குறுகிய காலத்தில் அவர்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை. ஆகவே இன்று நாம் இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறோம்,” கோலா லம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூறினார்.

பாக்காத்தான் மீண்டும் சிலாங்கூரை தற்காத்துக் கொள்ளும் என்ற கூற்றின் அடிப்படையில் அஸ்மின் அலி கூறுகையில், 2008-இல் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில், முதிர்ச்சியான சிந்தனை கொண்ட சிலாங்கூர் வாழ் மக்கள் மீண்டும் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் நேர்மையான, வெளிப்படையான மற்றும் மாநிலத்தின் வளத்தை சிறந்த முறையில் நிர்வகிக்கும் பாக்காத்தான் அரசாங்கத்தையே தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.

#கேஜிஎஸ்


Pengarang :