RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் 2018 பட்ஜெட் நவம்பர் 3-இல் தாக்கல் செய்யப்படும்

கோலா லம்பூர், செப்டம்பர் 11:

சிலாங்கூரின் 2018 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் எதிர் வரும் நவம்பர் 3=இல் சிலாங்கூர் சட்ட மன்றத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியினால் தாக்கல் செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்ற சபாநாயகர் ஹான்னா இயோ தெரிவித்தார்.

Hannah Yeoh

 

 

 

 

 

 

 

 

 

”  சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நவம்பர் 3-இல் தொடங்கவிருக்கும் நிலையில் சிலாங்கூர் மந்திரி பெசார் மாநில வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வார்,” என்று ‘மகளிர் தீய அரசியலை எதிர்ப்போம்’ பேரணியில் கலந்து கொண்ட பிறகு மாஜூ ஜங்ஷன் கட்டிடத்தில் முன் சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

மேலும் விவரிக்கையில், மாநில வரவு செலவு திட்டம் கடந்த ஆண்டைப் போல, மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்வார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டம் மலேசியாவிலே அனைவரும் எதிர் பார்க்கும் வரவு செலவு திட்டமாகும். பாக்காத்தான் ஆளும் மாநில அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தீட்டி மக்களை மகிழ்ச்சி கொடுப்பதில் சிலாங்கூருக்கு நிகர் மலேசியாவில் எந்த மாநிலமும் இல்லை என்று கூறினால் அது மிகையாகாது.

#கேஜிஎஸ்


Pengarang :