SELANGOR

சிலாங்கூரில் 100-வது இலவச பேருந்து சேவை

சுபாங் ஜெயா, செப்டம்பர் 27:
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 100 இலவச பேருந்து சேவைகளை வழங்கி வந்துள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் இறுதியில் மலேசியா சாதனை பத்தகத்தில்
இடம்பெற்றது.

இந் நாட்டில் அதிகமான அளவில் பேருந்து சேவையை வழங்கி வந்த ஒரு மாநிலமாக போற்றப்படும் அதேவேளையில் மலேசிய சாதனைப் பத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

இந்த இலவச பேருந்து சேவைகள் சிலாங்கூர் மாநிலம் முழுவது முள்ள பள்ளக்கூடங்கள்,மருத்துவமனைகள், வீடமைப்புத் திட்ங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 41 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த இலவச சேவையைப் பயன்படுத்தி வந்ததாகவும் இவ்வாண்டில் முதல் 6 மாதங்களில் அது 41 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது

 

#தமிழ் மறவன்


Pengarang :