SUKANKINI

மலேசியா-வட கொரியா இடையிலான ஆட்டம் தொடர்ந்து பியோங்யாங்கிலே நடைபெறும்

ஷா ஆலம், செப்டம்பர் 15:

ஆசிய கிண்ண தகுதி சுற்று கால்பந்து போட்டியில் ‘பி’ குழுவின் ஹாரிமாவ் மலாயா மற்றும் வட கொரியா மோதவிருக்கும் ஆட்டம் எதிர் வரும் அக்டோபர் 5-இல் பியோங்யாங்கில் நடைபெறும் என்று மலேசியா கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஹாமிடின் முகமட் அமீன் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் விளையாடும் இடம் மாற்றம் தேவையில்லை என்றும் ஆசிய கால்பந்து சங்கம் பரிசோதனை நடத்திவிட்ட நிலையில் பாதுகாப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது என்று கூறினார்.

வட கொரியா அதிகாரிகள் உடன் சந்திப்பு நடத்தி விட்டதாகவும், பிறகு முழுமையான விவரங்களை தருவதாக தெரிவித்தார். இதற்கு முன்பு மலேசியா மற்றும் வட கொரியா இடையிலான ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு தடவை தூதரக பிரச்சனைகளால் ஆட்டம் தள்ளிப்போடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :