NATIONAL

இருமொழி திட்டதிற்கு எதிரான வழக்கில் முன்னேற்றம்

கோலா லம்பூர், செப்டம்பர் 3:

பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான மே 19 இயக்கத்தினரின் வழக்கு  செப்டம்பர் 28 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணைக்கு வந்தது. அதைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் தோற்றதால், இந்த வழக்கு முழுமையான விசாரணைக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டது.

இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் மே 19 இயக்கத்தினர், பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அப்பள்ளியில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரி ஒரு நீதி மறுசீராய்வு (Judicial Review) மனு ஒன்றை கடந்த 5.9.2017-இல் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

அதன் சார்பாக அவ்வழக்கின் முழு விசாரணைக்கு முன்பாக அப்படிப்பட்ட வழக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதோடு நீதி மறுசீராய்வுக்கு உகந்ததா என்பதை உயர் நீதி மன்றம் பரிசீலனை செய்யும். அவ்வகையில் கடந்த 28.9.2017-இல் நீதிபதி டத்தின் ஹஜா அசிசா பின்தி ஹஜி நவாவி அவர்கள் முன் பரிசீலனக்கு வந்தது. அப்போது அரசு தரப்பின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து இந்த வழக்கு மறுசீராய்வுக்கு உகந்தது என்ற தீர்ப்பை வழங்கியது.

பிரதிவாதிகளாக பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. பஞ்சினியம்மாள்,  கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மலேசியா அரசாங்கம் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடபட்டதை அகற்ற உத்ததவிட்டது.

பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான இந்த வழக்கின் வாதிகள்;  என். பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராஜரெத்தினம், அதன் மேலாளர் வாரியத்தின் தலைவர் மருத்துவர் செ. செல்வம்), மற்றும் சுவராம் இயக்கத்தின் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் மற்றும் ஒரு பெற்றோர்ராவார்.  இவர்களின் வழக்குரைஞராக தினகரன் அவர்கள் வாதாடினார்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 12ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

செய்தித்தொகுப்பு: செம்பருத்தி


Pengarang :