SELANGOR

கோத்தா அங்கிரிக் சட்ட மன்றத்தின் முறுக்கு சுடும் நிகழ்வு

ஷா ஆலம், அக்டோபர் 6:

ஷா அலாம் இந்தியர் சமூக மேம்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு *யாகோப் சபாரி* மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி *சிவகாமி* ஆதரவோடு தீபாவளி முறுக்கு சுடும் நிகழ்வு கடந்த 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு மிக சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் ஆண்டுதோறும் தீபாவளி பொருட்கள் வாங்கும் பற்று சீட்டு பெறும் நானூறு பேருக்கும் இந்த முறுக்கு மாண்புமிகு யகோப் சபாரி அவர்களால் வழங்கப்படுகின்றது.

இவ்வேளையில் இந்த நிகழ்வினை ஆண்டு தோறும் எங்களை ஏற்பாடு செய்யக்கோரி இந்தியர்களுக்கென்று மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் மாண்புமிகு யகோப் சபாரி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி களந்த வாழ்த்துக்கள். இந்நிகழ்வின் மூலம் ஷா அலாம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து இந்திய பெண்கள் பயன் அடைந்துள்ளனர். இதன் வழி கிடைக்கப்பெற்ற லாபம் அவர்களின் தீபாவளி செலவினங்களுக்கு வழங்கப்பட்டது. தீபாவளி பெருநாள் காலங்களில் ஏற்படும் செலவினங்களை சமாளிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு.

இதன் முழு செலவினங்களை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி அந்த முறுக்குகளை வாங்கி அதை மக்களுக்கே பரிசளிக்கும் மாண்புமிகு யாகோப் சபாரி அவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்த வாய்ப்பினை சரியாக பயண்படத்திக் கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

#எஸ்பி.சரவணன்


Pengarang :