SELANGOR

சிலாங்கூர் அரசை மாசுப்படுத்த தெங்கு கிள்ளான் கருவியாக்கப்படுகிறது

கிள்ளான், அக்டோபர் 10:

மக்களின் பெரும் ஆதரவை பெற்று மக்களின் நம்பிக்கைகுரிய அரசாக விளங்கிடும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை மாசுப்படுத்த சில தரப்பினர் தெங்கு கிள்ளானாவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
தெங்கு கிள்ளானாவை பயன்படுத்தி இந்தியர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டி சில அநாவசிய நபர்கள் அரசியல் லாபம் தேட முற்படுவதோடு அவர்கள் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தை மாசுப்படுத்தும் நோக்கத்தோடும் செயல்படுகிறார்கள்.
சிலாங்கூர் மாநில இந்தியர்கள் அரசியல் சிந்தனையும் விவேகமான பார்வையையும் கொண்டிருப்பதால் தெங்கு கிள்ளானை பயன்படுத்தி மாநில அரசை மாசுப்படுத்த நினைப்பது அர்த்தமற்றது.அவர்களின் எண்ணமும் ஈடேறாது என்பது குறிப்பிடத்தக்கது.
உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஆவேசப்படும் இந்தியர்கள் இன்று இல்லை.விவேகமாக சிந்தித்தும் உண்மையை ஆராய்ந்து சீர்த்தூக்கி பார்த்து செயல்படும் இந்தியர்கள் மேலோங்கி விட்டதால் தெங்கு கிள்ளானானை வைத்து மாநில ஆட்சியை மாசுப்படுத்த நினைப்பதும் மாநில அரசாங்கத்தின் மீது தவறான தோற்றத்தை உருவாக்குவதும் மக்கள் மத்தியில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது.
சிலாங்கூர் அரசாங்கம் மக்களுக்கான தனித்துவ அரசாங்கமாக விளங்குவதோடு மாநில அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்கள் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#ரௌத்ததிரன்


Pengarang :