SELANGOR

சிலாங்கூர் இன்றுவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டு வரும் பண்டிகை தீபாவளி. நண்பர்கள், உறவினர்கள் ஓன்று கூடி கொண்டாடப்படுவது தீபத்திருவிழா. நாம் என்றென்றும் ஒன்று கூடி இருந்து, இன்றும் போல் என்றும் நாம் ஒற்றுமையாய் இருப்போம்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மாத இதழான ‘சிலாங்கூர் இன்று’ இது வரை தனது இலக்கை அடைய உதவி கரம் நீட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறோம். மலேசியாவில் தமிழுக்கு பெருமை சேர்த்த மாநிலம் சிலாங்கூர் அரசாங்கம் என்றால் அது மிகையாகாது.

சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் தொடர்ந்து சிலாங்கூர் இன்று மாத இதழ் மற்றும் இணைய தளத்தில் பதிவு செய்யும் செய்திகளை மற்றவர்களுக்கும் பரப்பினால் நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை.

கு. குணசேகரன் குப்பன்
சிலாங்கூர் இன்று மாத இதழின் ஆசிரியர்


Pengarang :