NATIONAL

நவம்பர் மாதம் ஆரம்பம் வரை தொடரும் பருவ மழை

ஷா ஆலம், அக்டோபர் 5:

பருவமழை மாற்றம் நிலையை மலேசியா எதிர்  நோக்கும். நாளை ஆரம்பமாகும் இந்நிலை நவம்பர் மாதம் ஆரம்பம்   வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலவீனமான காற்று நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்து வீசும் என மலேசிய
வானியல் திணைக்களம் (MMD) தெரிவித்தது.

பலத்த காற்று, இடி, மின்னல் போன்ற தாக்கத்திலிருந்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, கனத்த மழை , பலமான காற்று பெரும்பாலும் குறுகிய நேரம் வரை,.மாலை மற்றும் இரவுகளில் அடிக்கடி நிகழும். மேற்கு கடற்கரையின் பெரும்பாலான
பகுதிகளிலும், தீபகற்பத்தில், சபாவின் மேற்கு கடற்கரையிலும், சபாவின் மேற்குப் பகுதிகள், சரவாக்கின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் இது
நிகழும்.

சமீபத்திய வானிலை தொடர்பான தகவல்களை MMD வலை மூலம் பெறலாம்:
www.met.gov.my, aplikasi mobil-mycuaca, facebook: malaysiamet,
twitter:@malaysiamet atau MMD Hotline di talian 1 300 22 1MET (1638)

#சரவணன்


Pengarang :