SELANGORUncategorized @ta

அம்னோ-பிஎன் சிலாங்கூர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மதிக்கவில்லை?

ஷா ஆலம், நவம்பர் 23:

அம்னோ தேசிய முன்னணி கடந்த 12-வது மற்றும் 13-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மக்கள் தேர்வு செய்த அரசாங்கத்தை மதிக்காமல் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் படங்களை இம்மாநிலத்திற்குள் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்களில் மாட்டி வைக்க தடைவிதித்துள்ளது என்று புக்கிட் காட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் இஸ்கண்டர் முகமட் அகீன் கூறினார். அஸ்மின் அலியின் கீழ் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிறந்த முறையில் அரசியல் சித்தாந்தங்களை கடந்து மக்களுக்கு நன்மைகள் செய்து வருகிறது என்றார்.

”   இது ஒரு சிறிய பிரச்சினையாக இருந்தாலும், அம்னோ தேசிய முன்னணி மக்களின் தேர்வை மதிக்காமல் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் தேர்தல் மூலம் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க மக்களுக்கு அதிகாரம் உண்டு என்பதனை மறந்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அம்னோ தேசிய முன்னணி சிலாங்கூர் தேர்ந்தெடுத்த அரசாங்கம் பாக்காத்தான் என்றும், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் மக்கள் இவர்களை புறக்கணித்தார்கள் என்ற நிதர்சன உண்மையை மறந்து விடாதீர்கள் என்று விவரித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :