NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூர், மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகமான ஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டும்

ஷா ஆலம், நவம்பர் 28:

சிலாங்கூர் மாநிலத்திற்கு மத்திய அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் அலி மேலும் கூறுகையில், உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியை சிலாங்கூர் மாநிலமே மத்திய அரசாங்கத்திற்கு பெற்றுத் தருகிறது என்றார்.

ஆனாலும், சிலாங்கூர் மாநிலம் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மிகவும் சிறிய அளவிலான ஒதுக்கீட்டை மட்டுமே பெற்றுள்ளது வருத்தப்பட வேண்டிய ஒன்று என்று விவரித்தார்.

நேற்று நடந்த நிதிஅமைச்சின் நிதி உதவி வழங்கும் விழாவில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மற்றும் கிள்ளான் நகராண்மை கழகம் வராத நிலையை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு பதில் அளித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :