SELANGOR

மேருவில் ‘மக்களின் மீது அக்கறை’ சூறாவளி பயணம்

மேரு, நவம்பர் 27:

‘மக்களின் மீது அக்கறை’ சூறாவளி பயண நிகழ்ச்சி காப்பார், மேரு சட்ட மன்றத்தில் தாமான் மேரு இண்டாவில் நடைபெற்றது. சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னாள் இந்திய கிராமத்து தலைவர் திரு வீரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) குறித்து முழு விபரங்களையும் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும் உடனடியாக மேற்கண்ட திட்டங்களில் பொது மக்கள் பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :