ANTARABANGSA

அன்வாரை விடுதலை செய்யக்கோரி துன் மகாதீர் வேண்டுகோள்

ஷா ஆலம், டிசம்பர் 13:

மோசமான சுகாதார நிலையில் இருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லி உடன் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது மோட்லி கோலா லம்பூரில் இருந்துக் கொண்டு மகாதீர் முகமட்டை சந்தித்து அன்வார் இப்ராகிமின் விடுதலைக்கு வியூகங்களை வகுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

மகாதீர் மற்றும் மோட்லி கூறுகையில், அன்வாருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனாலும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இது சாத்தியம் இல்லை என்றார்.

 


Pengarang :