SELANGOR

சுங்கை பாக்காவில் சிலாங்கூரின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி

ரவாங், டிசம்பர் 25:

சுங்கை பாக்காவ் இந்திய கிராமத்து தலைவர் திரு அச்சணன் நாயுடு ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநிலத்தின்  பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி சுங்கை பாக்காவ் பழைய ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ சேவை மையத்தின் ஆதரவோடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை, கீஸ் அட்டை, மூத்த குடிமக்கள் திட்டம், திருமண ஊக்குவிப்பு தொகை, தாவாஸ் போன்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிராமத்து தலைவர்கள் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்து தலைவர் திரு அச்சணன் நாயுடு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 48 இந்திய கிராமத்து தலைவர்களில் மிகப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ தெரிவித்தார்.

 

மேலும் சுங்கை பாக்காவ் இந்திய கிராமத்து இளைஞர் அணி தலைவர் குமார் மகேந்திரன் மற்றும் கிராமத்து இளைஞர்கள் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று அச்சணன் நாயுடு கூறினார்.


Pengarang :