SELANGOR

நோர்டின் வெற்றியில் மாநில வருமான உயர்வும் ஒன்று

ஷா ஆலம், டிசம்பர் 30:

டத்தோ நோர்டின் சுலைமான் அவர்கள் தன் மாநில நிதி துறை அதிகாரியாக பணி ஒய்வு பெற்றத்தில் மாநில வருமானம் உயர்வு பெற்றதைத் தன் இன்பமான அனுபவமாக கருதுகிறார்.
அவர் கருத்தின் படி மாநில அரசு 2012 முதல் இன்று வரை ரி.ம 2.8 பில்லியன் வருமானத்தை பெற்றதாகக் கூறினார். ஆண்டுக்கு ஆண்டு ரி.ம 2 பில்லியனுக்குக் குறைவாக இருந்த மாநில அரசு நிதியை மேம்படுத்தியதில் அவர் மன நிறைவு பெற்றுள்ளதாக கூறினார்.
வரி வாரிய துறையினர் மற்றும் மாநில தலைவர்களின் ஒற்றுமையாலும் இத்தகைய வெற்றியினை தான் காண முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வெற்றியினைக் காண அனைவரின் ஒத்துழைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது எனவும், இந்த ஐந்து வருட காலங்களில் அவருக்கு நிறைய பசுமையான அனுபவங்களுமே கிட்டியது என நோர்டின் மகிழ்ந்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :