NATIONAL

பாபாகோமோ , அன்வாருக்கு ஏறக்குறைய ரிம 1 மில்லியன் இழப்பீட்டு தொகையை செலுத்தினார்

ஷா ஆலம், டிசம்பர் 4:

சர்ச்சைக்குரிய சமூக வலைத் தள பதிவாளரான பாபாகோமோ, கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ரிம 951,260.30 இழப்பீடு தொகையாக இன்று வழங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அன்வார் தொடுத்த மானநஷ்ட வழக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து நீதிமன்றம் இத்தொகையை வழங்குமாறு கட்டளை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

பாபாகோமோ அல்லது இயற் பெயரான வான் முகமட் அஸ்ரி ரிம 950,000-ஐ வங்கி காசோலையாகவும் மற்றும் ரிம 1,260-ஐ பணமாகவும் நீதிமன்றத்தில் செலுத்தினார். அவரின் வழக்கறிஞர் இர்னா ஷாஹானா சம்சுதீன் மூலமாக இது செய்யப்பட்டது.

இத்தொகை அன்வாரின் வழக்கறிஞர் லத்தீபா கோயாவிடம் கோலா லம்பூர் உயர் நீதிமன்ற துணைப் பதிவதிகாரி ஹூஸ்னா ஸூல்கிப்லி முன்னிலையில் வழங்கப்பபட்டது.

 

 

 

 

#வீரத் தமிழன்


Pengarang :