ஷா ஆலம், டிசம்பர் 5:
எதிர் வரும் 14-வது போதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி வெற்றியை தக்க வைத்து கொள்ளும் தருணத்தில் அடுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து நீடிப்பார் என்று தைரியமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் தியான் சுவா அறைகூவல் விடுத்தார். இந்த நடவடிக்கை 14-வது பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் தங்களின் தேர்வை செய்ய இலகுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.
” தேர்தலில் வெற்றி பெற்றால் நஜீப் ரசாக் தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என்று தேசிய முன்னணி எங்கும் குறிப்பிடவில்லை. அப்படி நஜீப் ரசாக் தொடர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்தார் என்றால் தேசிய முன்னணிக்கு தலைமைத்துவ பற்றாக்குறை ஏற்படுகிறது என்று அர்த்தமாகும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், அடுத்த தேர்தலுக்கு பிறகு நஜீப் ரசாக் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்றாலும் பொது மக்களுக்கு முன்னறிவிப்பு அவசியம் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
#தமிழ் அரசன்