NATIONAL

ஆர்ஓஎஸ் தொடர்ந்து அமைதி காப்பது; பாக்காத்தான் வருத்தம்!!!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16:

மலேசிய சங்க பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பதிவின் அடிப்படையில் தொடர்ந்து அமைதி காக்கும் செயலைக் கண்டு கூட்டணியினர் வருத்தம் அடைவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். ஆர்ஓஎஸ்-இன் மௌனம், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் விண்ணப்பம் ஏறக்குறைய நிராகரிக்கப்பட்டதாகவே பொருட்படும் என்று தெரிவித்தார்.

”  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சின்னத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதுவரை ஏன் நமது விண்ணப்பத்தை தொட்டு எந்த பதிலும் கிடைக்கவில்லை. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டதா அல்லது இல்லையா என்று தெரிவிக்கப்படவில்லை,” என்று பெர்சத்து கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உச்ச மன்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு  பேசினார்.

 

 

 

இதனிடையே, பிப்ரவரி தொடங்கி 14-வது பொது தேர்தல் வரை, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாடு தழுவிய அளவில் சூறாவளி பயணம் மேற்கொள்ளும் என்று விவரித்தார். இந்த பயணத்தில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கொள்கைகள் மற்றும் தேசிய முன்னணியின் குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கங்கள் அளிக்கப்படும் என்று கூறினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :