NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூரின் முன்கூட்டியே தேர்தல் இல்லை

கொம்பாக், ஜனவரி 12:

சிலாங்கூர் மாநிலத்தில் முன் கூட்டியே தேர்தலை நடத்தும் எண்ணம் எதனையும் மாநில அரசு கொண்டிருக்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார்.மாநில அரசாங்கத்திற்கான சேவை காலம் இன்னும் குறுகிய காலத்தில் முடிவடையும் நிலையில் நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னராக மாநில தேர்தலை நடத்தும் சூழல் அவசியமற்றது என்றார்.

இந்த ஆலோசனை இன்றைய சூழலில் அவசியமற்றது.அஃது தேவையில்லாத சூழலை உருவாக்கும் எனவும் கூறிய அவர் இதற்கான செலவினமும் அதிகம் என்றார்.மக்களின் பணத்தை பொறுப்போடு நிர்வாகி க்க வேண்டியது நமது கடமை.அந்நிலையில் முன்கூட்டிய தேர்தல் அவசியில்லை என்றார்.
இந்த ஆலோசனை ஓராண்டு முன்னர் வைக்கப்பட்டிருந்தால் நாம் பரிசீலனை செய்திருக்கலாம் எனவும் கூறிய அவர் இவ்வாண்டில் அஃது அவசியமற்றது என தெரிவித்தார்.

இன்றைய சூழலில் மக்களின் நலனை மேம்படுத்துவதும் அவர்களின் வாழ்வாதரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதும் அதேவேளையில் சிறந்த சேவையினை முன்னெடுப்பதுமே மாநில அரசின் இலக்கு என்றார்.
இதற்கிடையில்,ஹராப்பான் கூட்டணி மாநாட்டில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் இலக்கில் வெற்றி பெறுவதுமே உன்னதம் என்றார்.
மாநில தேர்தலை முன் கூட்டியே நடத்த வேண்டும் என செகு பாஃட் கொண்டு வந்த ஆலோசனை தொடர்பில் மந்திரி பெசார் இவ்வாறு கருத்துரைத்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :