NATIONAL

சிலாங்கூரின் வெற்றிக்கு ஒருங்கிணைந்த சிந்தனைக் கொண்ட நிர்வாகமே காரணம் !!!

ஷா ஆலம், பிப்ரவரி 18:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் செயல்படும் மாநில அரசாங்கம் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் வழி சிறந்த வெற்றிகளை பெறும் என்று மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபியி கூறினார். இந்த விடயத்தில் சிலாங்கூர் மாநிலம் 2008-இல் கையிருப்பு ரிம 400 பில்லியனில் இருந்து, இன்று ரிம 4 பில்லியனை எட்டியுள்ளது பாக்காத்தான் மாநில அரசாங்கத்தின் வெற்றியாகும் என்று தெரிவித்தார்.

”  சிலாங்கூர் மாநில மக்கள் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் நிர்வாகத்தில் மனநிறைவு அடைந்துள்ளனர். சிலாங்கூரின் வெற்றிகளைக் கண்டு பொறாமை கொண்டவர்கள், சிலாங்கூர் மாநிலத்தை குறை கூறி வருகின்றனர். தற்போதைய மாநில நிர்வாகத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த அடைவு நிலையை எட்டியுள்ளது,” என்று விவரித்தார் .

இதனிடையே  கெஅடிலான் கட்சி, சிலாங்கூர் மாநில நிர்வாகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்ற கூற்றை மறுத்தார். இது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு ஆகும் என்று விவரித்தார்.


Pengarang :