NATIONAL

தேர்தல் முறைகேடுகள் அடங்கிய ஒலிப்பதிவு அம்பலமானது!!!

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 8:

பெர்மாத்தாங் பாவோ தொகுதி அம்னோவின் முக்கிய தலைவர் ஒருவரின் தேர்தல் முறைகேடு மற்றும் தபால் வாக்குகள் பற்றிய ஒலிப்பதிவு அம்பலமாகி உள்ளது. கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் ஹஃபீப் பஹாரூடின் தகவல் ஊடகங்கள் முன்னிலையில் ஒலிப்பதிவு அம்பலமாக்கினார். சம்பந்தப்பட்ட ஒலிநாடா செபராங் பிறை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அம்னோ கிளைகளின் தேர்தல் இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிகழ்ச்சியில் பேசப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”  இந்த ஒலிப்பதிவில், முக்கிய அம்சம் ஒன்று ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எங்களின் குற்றச்சாட்டு இன்று நிருபிக்கப்பட்டு இருக்கிறது. இது உண்மை என்றால் அம்னோவின் தேர்தல் முறைகேடு தொடர்பில் சில அரசு இலாகாவினரும் குறிப்பாக மலேசிய தேர்தல் ஆணையம் மற்றும் அரச மலேசிய காவல்துறையும் சம்பந்தப் பட்டுள்ளது,” என்று  கெஅடிலான் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாபீஃப் தெரிவித்தார்.

 

 

 

 

 


Pengarang :