SELANGOR

பெட்டாலிங், ஷா ஆலம் & கிள்ளான் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், பிப்ரவரி 16:

சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனம் (ஷாபாஸ்) இன்று பெட்டாலிங், ஷா ஆலம் மற்றும் கிள்ளான் வட்டாரத்தில் குடிநீர் விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியதாக ஷாபாஸ் நிறுவனத்தின் பயனீட்டாளர் மற்றும் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராஹூப் அமாட் கூறினார். குடிநீர் விநியோகச் சேவை, தண்ணீர் சேமிப்பு ஏரியில் குறைந்ததால் தடங்கல் ஏற்பட்டது.

”  நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். பயனீட்டாளர்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடாது இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அனைத்து ஷாபாஸ் குடிநீர் சேவையை பயன்படுத்தி வரும் பயனீட்டாளர்களையும் ஒத்துழைப்பு மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டுகோள் விடுக்கிறோம்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :