SELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் எஸ்பிஆர்எம்-க்கு ஒத்துழைப்பு நல்கும் !!!

ஷா ஆலம், பிப்ரவரி 16:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், ஈஜோக் நில சம்பந்தப் பட்ட ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கி விட்டதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சில அரசு சாரா இயக்கங்கள் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக விவரித்தார். சிலாங்கூர் மாநில அரசு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதி அளித்தார்.

 

 

 

 

 

 

”  சிலாங்கூர் மாநில அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளது. இதன் முழுமையான விசாரணை தொடர்பான விளக்கங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே  சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் தொடர்பு வியூக இயக்குனர் இன் ஷாவ் லூங் கூறுகையில்  தேசிய முன்னணி அரசாங்கம் காலம் காலமாக தீர்த்து வைக்க முடியாத நெருக்கடி நிறைந்த நிலப் பிரச்சினையை நான்கே ஆண்டுகளில் முடிவு கண்ட மந்திரி பெசாரின் அரசியல் சாமர்த்தியத்திற்கு நிகர் அவரே என்றார். அதே வேளையில், அம்னோ தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் பெல்டா நிறுவனத்தின் நில விவகாரத்தில் இன்னும் தீர்க்க படாமல் இருப்பது மட்டுமில்லாமல் அதன் நிர்வாகம் மோசடி மற்றும் ஊழல் நெருக்கடியில் மாட்டிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்றார்.


Pengarang :